வியாழன், 20 மார்ச், 2008

அதிகாரிகள் தங்கி இருக்கும் கட்டிடத்துக்கு ரூ.160 கோடி வரிபாக்கியை உடனே கட்டுங்கள்-இந்தியாவுக்கு அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

இந்திய அதிகாரிகள் பயன்படுத்தி வரும் இந்த கட்டிடத்துக்கு ரூ.160 கோடி வரியை இந்தியா கட்ட வேண்டும் என்று அமெரிக்க அரசு கூறியது.
ஆனால் சர்வதேச உடன் பாட்டின்படி ராஜியத்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் கட்டிடங்களுக்கு வரி செலுத்த தேவை இல்லை என்று இந்தியா கூறி வந்தது.

இந்த விவகாரம் அமெரிக்க கோர்ட்டு வரைக்கும் சென்றது. வியன்னா தீர்மானத்தின்படி வெளிநாட்டு தூதுவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகளுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்க முடியும். 26 மாடி கட்டிடத்தில் பயன்படுத்தி வரும் 20 மாடிகளுக்கு வரியை செலுத்தியே ஆக வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் கோர்ட்டில் வாதாடியது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட அமெரிக்க மாவட்ட கோர்ட்டு இந்தியா ரூ.160 கோடிக்கு கட்டிட வரியை செலுத்தியே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: