திபெத்தில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து புத்த மத தலைவர் தலாய்லாமா ஒரு ஆங்கில வாரபத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சீனாவில் இருந்து விடுதலை பெற்று தனி நாடாக செயல்பட திபெத்தியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திபெத்திய இளைஞர்க ளிடம் இந்த உணர்வு அதிகம் காணப்படுகிறது. நான் இறந்து விட்டாலும் இந்த போராட்டம் ஓய்ந்து விடும் என்று சீனா நினைக்க வேண்டாம். நான் இறந்து விட்டால் இந்த போராட்டம் ஓயாது இன்னும் அதிகரிக்கும்.
திபெத் சீனாவின் ஒருங் கிணைந்த பகுதி என்று நாள் ஒருபோதும் கூறமுடியாது. அப்படி நான் கூறினால் மக்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள்.திபெத்தை சீனா ஆக்கிரமித்தது உள்ளது.
திபெத் தனிநாடாக ஆனால் சீனாவுடன் பகையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அல்ல. இரு நாடுகள் நட்புடன் செயல்படமுடியும். ஐரோப்பிய �னியனில் பல்வேறு நாடுகள் ஒற்றுமையமாக செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு தலாய்லாமா கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக