வீரகேசரி இணையம் - இலங்கையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்ட விரோதமாக கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடியே 98 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மோட்டார் வாகனங்களுக்கு பொறுத்தக்கூடிய மூன்று சிலிண்டர்களுக்குள் மறைத்து வைத்து கடத்தப்படவிருந்த நாணயத்தாள்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்துள்ளதாகவும் விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
சிலின்டர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி வெளிநாட்டு நாணயத்தாள்கள் சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த விமானத்தின் மூலம் பிரிதொரு நாட்டுக்கு கடத்திச் செல்லப்படவிருந்த நிலையிலேயே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிலின்டர்கள் மீது சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள் அதனை சோதனையிட்டுள்ளனர். இதன்போது, மீட்கப்பட்ட நாணயத்தாள்களில் யூரோ, அமெரிக்க டெலர் உட்பட பன்நாட்டு நாணயத்தாள்கள் அடங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இந்த நுட்பமான கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பொலிஸ் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக