செவ்வாய், 25 மார்ச், 2008

புற்று நோயாளிகள் உணர்ச்சிகளை எழுதினால் பாதிப்பு குறையும்: ஆராய்ச்சியில் தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புற்று நோயாளிகளிடம் ஒரு ஆய்வு கூறினார்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் தெரிந்து இருப்பதாவது:-புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்கள் தினமும் தங்கள் உணர்ச்சிகளையும் விருப்பு வெறுப்புகளையும் ஒரு காகிதத்தில் எழுதலாம். தினம் 20 நிமிடம் வரை எழுதுவதால் அவர்களது புற்று நோயின் தாக்கம் குறைகிறது.

மன உளைச்சலில் இருந்தும் அவர்கள் விடுபட முடியும். கவலைகள் பாதிக்கு மேல் குறையும். உறக்கமும் வாழ்க்கையில் பிடிப்பும் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது.

70 சதவீதம் வரை இது பலனை கொடுக்கிறது. தினமும் இந்த ஒரு பயிற்சியை போல் மேற்கொள்ள வேண்டும். பேசுவதை விட உணர்ச்சிகளை எழுத்து மூலம் தெரிவிப்பது நல்லது.

இவ்வாறு அந்த ஆராய்ச் சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: