'ஏகன்' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை கவுதம் இயக்குகிறார். ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பில், ராஜூசுந்தரம் இயக்கும் ஏகனில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஜித்.
ஸ்ரேயாவிலிருந்து கத்ரினா கைப் வரை பலரை முயன்றும் கடைசியில் ஏகனில் ஜோடியானவர் நயன்தாரா. அஜித்தின் அடுத்தப் படத்துக்கு இந்த கதாநாயகி குழப்பம் இல்லை. நன்றி சொல்ல வேண்டியது கவுதமுக்கு. சிவாஜி புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் அஜித் படத்துக்கு கவுதம்தான் இயக்குனர். கதையை தீர்மானிக்கும் முன்பே சமிராரெட்டிதான் கதாநாயகி என முடிவாகியுள்ளது.
எப்படி?
தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த சமீராரெட்டியை 'வாரணம் ஆயிரம்' படத்துக்காக கோடம்பாக்கம் கொண்டு வந்ததே கவுதம்தான். 'காக்க காக்க' படத்திலேயே எனக்கு அழைப்பு விடுத்தார் கவுதம் என சொல்லித் திரிகிறார் சமிரா. எப்படியோ.... 'வராணம் ஆயரம்' படத்தில் சமீராவின் நடிப்பில் சொக்கிப் போனவர் தனது அடுத்தப் படத்துக்கும் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளார்.
கவுதமின் தேர்வுக்கு அஜித், சிவாஜி புரொடக்ஷ்ன், இரு தரப்புமே மறுப்பு கூறவில்லையாம்.
வியாழன், 20 மார்ச், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக