நேபாளத்தில் அரசியல் நிர்ணயசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். நேபாளத்தில் அடுத்த மாதம் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேபாள் ராஷ்டிரிய ஜன்மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் கமல் பாசத் அத்திகாரி (38) என்பவரும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டுக்கு துப்பாக்கியுடன் வந்த 4 நபர்கள், கமலை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் புதன்கிழமை இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 நபர்களை போலீஸ�ர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ஷர் பகதூர் தேபா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு விட்டு நேபாள காங்கிரஸ�ர் மினி-வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு தோதி மாவட்டத்தில் இந்தப் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 5 பேர் இறந்தனர். 12-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்; அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வியாழன், 20 மார்ச், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக