வியாழன், 20 மார்ச், 2008

புற்றுநோய் செல்களை வளர்க்கும் "என்சைம்' எதுவென்று கண்டுபிடிப்பு!

புற்றுநோயை உடலில் பரவச் செய்யும் செல்களை ஊக்கப்படுத்தும் "என்சைம்" எதுவென்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆராய்ச்சி மேலும் தொடருகிறது. புற்றுநோயாளிகளுக்குத் தரும் மருந்தை வீரியம் உள்ளதாக மாற்ற இந்த கண்டுபிடிப்பு பயன்படக்கூடும்.

ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் லூயி கேன்ட்லி என்பவர் தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. கேன்சர் செல்கள் கட்டுக்கு அடங்காமல் வளர உடலில் உள்ள குளுகோஸ்களை அதிகம் சாப்பிடுகிறது. அந்தச் செயலுக்குத் துணைபுரியும் என்சைம் "பைருவேட் கினாசே' என்று அழைக்கப்படுகிறது. அதிலும் இருவகை இருக்கிறது. அதில் ""பிகேஎம்-2'' என்று அடையாளம் காணப்பட்டுள்ள என்சைம்தான் அதிக அளவில் குளுகோûஸச் சாப்பிட வைக்கிறது.

இந்த என்சைமைக் குறைத்தாலோ, கட்டுப்படுத்தினாலோ புற்றுநோயின் வீரியத்தைக் குறைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஆய்வுக்கூடத்தில் உள்ள எலிக்கு இந்த என்சைமைக் கொடுத்தும், நீக்கியும் சோதித்ததில் இது ஊர்ஜிதம் ஆனது. ஆனாலும் மேலும் சில சோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.

75 ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு வாங்கிய ஜெர்மானிய அறிஞர் ஆட்டோ வார்பர்க் என்பவர், புற்றுநோய் செல்கள் அதிக அளவில் குளுகோஸ்களைச் சாப்பிடுகிறது என்று கண்டுபிடித்தார்.

ஆனால் அவரால் அதற்குக் காரணமான என்சைம் எது என்று திட்டவட்டமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை: